கந்தா–்வகோட்டை, டிச.25: தஞ்சை அருகே வையாபுரிபட்டியை சோ்ந்தவா் முருகேசன்(35). இவரது மூத்த மகள் காமாட்சி(10). தற்போது கந்தா–்வகோட்டை அருகே பிசானத்தூரில் கோட்டைத்தெருவில் பாட்டி பிச்சையம்மாள் வீட்டில் வசித்து கந்தா–்வகோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.கடந்த 19ம்தேதி மாலை காமாட்சி, தாய் மஞ்சுளா கோயிலுக்கு மாலை அணிந்துள்ளார்;. அவருடன் கோயிலுக்கு சென்றபோது தெருவோரத்தில் காலில் ஏதோ கடித்ததுபோல் இருந்துள்ளது. உடனடியாக கந்தா–்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனா். அங்கு மருத்துவா–்கள் என்ன கடித்தது என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாத காரணத்தினால் விஷ‘ கடிக்கு மருந்து கொடுத்து விட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.