ஆரணி ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளி மாயம்

பொன்னேரி. டிச. 19:  பொன்னேரி அருகே குறுக்கு வழியில் உறவினர் வீட்டிற்கு செல்ல, ஆரணி ஆற்றில் இறங்கி நீந்தி சென்ற கூலி தொழிலாளி திடீர் என தண்ணீரில் மூழ்கி மாயமனார். இவரை, 2நாட்களாக தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

பொன்னேரியில்  உள்ள திருவாய்பாடி கள்ளுக்கடைமேடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (26). கூலித்தொழிலாளி. இவரது உறவினர் வீடு தேவராஞ்சேரி கிராமத்தில் உள்ளது. அந்த பகுதி சுமார் 3 கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தேவராஞ்சேரி செல்வதற்காக குறுக்கு வழியாக ஆரணி ஆற்றை கடந்து சென்றால் விரைவாக போய்விடலாம் என முடிவு செய்தார்.  பின்னர், அவர் ஆரணி ஆற்றில் இறங்கி கரைக்கு நீந்தி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் ஆற்றில் மூழ்கி திடீர் என மாயமானர். இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னேரி    தீயணைப்பு வீரர்கள்  அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணி இரவு வரை நீடித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.   இதனையடுத்து, நேற்று கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து தேடி வருகின்றனர். இரவு வரை உடல் கிடைக்க வில்லை. தொடர்ந்து தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: