ஈரோடு, டிச. 19: தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்களா? என ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி, ஈரோடு ரயில் நிலைய மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் நேற்று ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.