தமிழ் இலக்கிய மன்ற விழா

தேனி, டிச. 18: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. விழாவிற்கு தேனி நாடார் உறவின்முறைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர் தில்லைக்கனி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பியுலாராஜினி வரவேற்றார். இதில் ஊடகவியலாளர் முகம்மத்அமீன் கலந்து கொண்டு பேசினார்.விழாவில் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியை கவியரசி நன்றி கூறினார்.

Related Stories: