நடந்தது திருச்சி பகுதியில் தூறல் மழை

திருச்சி, டிச.18: திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தூறல் மழை பெய்தது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, சராசரி அளவை எட்டிவிட்டது. இனி வரும் நாட்களில், குறைந்த அளவுக்கே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலை நிலவும், சென்னை உள்ளிட்ட, கடலோர பகுதிகளில், லேசான தூறலுடன் மழை இருக்கும். பல இடங்களில், பகலில் மிதமான வெயிலும், இரவு முதல் அதிகாலை வரை பனி நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. திருச்சியில் நேற்று காலை குளிர் காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 9.30 மணி அளவில் தூறல் மழை பெய்தது. திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, லால்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.

Related Stories: