திருச்சி, டிச.18: திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தூறல் மழை பெய்தது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, சராசரி அளவை எட்டிவிட்டது. இனி வரும் நாட்களில், குறைந்த அளவுக்கே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலை நிலவும், சென்னை உள்ளிட்ட, கடலோர பகுதிகளில், லேசான தூறலுடன் மழை இருக்கும். பல இடங்களில், பகலில் மிதமான வெயிலும், இரவு முதல் அதிகாலை வரை பனி நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.