பாரம்பரிய மரக்கன்று நடும் விழா

திருமங்கலம், டிச.13: திருமங்கலம் நகரை பசுமை நகராக்கும் விதமாக சித்தர்கூடம் களப்பணி நண்பர்கள் மற்றும் திருமங்கலம் நகராட்சி இணைந்து பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திருமங்கலம்-விருதுநகர் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான நுண்உர கூடத்தில் மகிழம் மரம், புங்கன், செம்மரம், செண்பகமரம் உள்ளிட்ட பாரம்பரிய மரக்கன்றுகள் நடப்பட்டன. திருமங்கலம் மக்கள் சேவை சங்க துணைத்தலைவர் வில்லியம் எபினேசர், நகராட்சி சுகாதார அலுவலர் சிக்கந்தர் மற்றும் சித்தர்கூட களப்பணி நண்பர்கள் குழுவை சேர்ந்த சோம்நாத் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

Related Stories: