திண்டுக்கல், டிச. 13: திண்டுக்கல்- சிலுவத்தூர் சாலை ஏர்போர்ட் நகர் அருகே ஸ்வீட் கடைக்கு ஒரு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு திருநெல்வேலி மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் (45) ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று இயந்திரத்தில் மாவு பிசைந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். உடன் வேலை செய்பவர்கள் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாரியப்பன் உடல் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.