ஆவடி, டிச. 13: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரிலுள்ள சுடுகாடு பராமரிப்பின்றி முட்புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும், இங்கு மின் விளக்கு, தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சி 8வது வார்டு, திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
குறிப்பாக தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதி கிடையாது. இதனால் சடலங்களை எரிக்க, புதைக்க வரும்போது பொதுமக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். மேலும், அவர்கள் சடலத்துடன் வரும்போதே, குடங்களில் தண்ணீருடன் சுடுகாட்டுக்கு வருகின்றனர். இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படாததால் விளக்குகள் எரியாமல் வீணாகி கிடக்கின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்கு காரிய மேடை 5 லட்சம் செலவில் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகிறது.