பழநி, டிச. 12: அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களை குறித்து வைக்கும் பணம் பறிக்கும் கும்பல்கள் அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்கள், மாணவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சரூரமப் பணியாளர் குழுமம் போன்ற அமைப்புகள் மூலமும், மத்திய அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள், யூபிஎஸ்இ, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி மூலமும்- வங்கி காலியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமும் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் உள்ள காலியிடங்கள் அந்த நிறுவனங்கள் மூலமும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், குறுக்கு வழியில் அரசு வேலை பெறலாம் என்ற தவறான எண்ணத்தில் பல பெற்றோர்களும், மாணவர்களும் அறியாமையின் காரணமாக அரசு வேலைக்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து வருகின்றனர்.