திண்டுக்கல், டிச. 12: சித்தையன்கோட்டை ஆண்டிக்குளத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனையில் ஈடுபட்டு வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்டது ஆண்டிக்குளம். சுமார் 5 ஏக்கர் பரப்பிலான இந்த குளம் தூர்ந்து போய் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவுநீர் இங்கு தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் எப்போதுமே குறைவாக இருக்கும். இச்சூழலை பயன்படுத்தி இங்குள்ள 3 சென்ட் இடத்தில் மர்மநபர்கள் கஞ்சா விவசாயம் செய்துள்ளனர். இங்கு விளைந்த கஞ்சாவை செம்பட்டி, புல்வெட்டி கண்மாய், பாளையங்கோட்டை, சொக்கலிங்கபுரம் பகுதியில் ஜோராக விற்பனை செய்துள்ளனர்.