திருவரங்கம் கோயிலில் கார்த்திகை மகா தீபம்

திருவரங்குளம், டிச.12: திருவரங்குளம் பெரியநாயகி அம்மாள் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் அரங்கநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாத தீப கார்த்திகை விழாவை முன்னிட்டு கோயில் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு பால், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக 150 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்து சந்திரசேகர சுவாமி வீதி உலா நடைபெற்றது.

Related Stories: