உடுமலை, டிச. 12: உடுமலை அருகே மடத்துக்குளம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கணியூர் சாலை கழுகரையிலும், குமரலிங்கம் சாலை செங்கழனிபுதூரிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த இரண்டு கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், குடிமகன்களால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக நீலம்பூர், கண்ணாடிபுத்தூர், பாப்பான்குளம், குமரலிங்கம் செல்லும் 2 சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
மதுகுடித்துவிட்டு அரைகுறை ஆடையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் நடமாட முடிவதில்லை. இந்த 2 கடைகளிலும் பார் அனுமதி காலாவதியான பின்னரும், ஆளும் கட்சி பிரமுகர்களின் நேரடி கண்காணிப்பில் சட்ட விரோதமாக பார்கள் செயல்படுகின்றன. இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது.