பாரதியார் பிறந்த நாள் மாணவர்கள் மலர்தூவி மரியாதை

திருப்பூர், டிச. 12:  மகாகவி பாரதியாரின் 137வது பிறந்த நாளையொட்டி திருப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.   தூத்துக்குடி அருகே உள்ள எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு பிறந்த பாரதியார் பல்வேறு கவிதை தொகுப்புகள், பாடல்கள் மற்றும் மொழி சார்ந்த கவிதைகள் ஆகியவற்றை எழுதி புகழ் பெற்றார். இவரின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருப்பூரில் உள்ள பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவற்றில் பாரதியாரின் படத்திற்கு மாணவ, மாணவிகள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தி பாரதியாரை பற்றி விளக்கி பேசினர்.

Related Stories: