கரூர், டிச.12: நதிநீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மழை அளவு குறைவாகவே உள்ளது. அவ்வப்போது பருவமழை பெய்தாலும் கடந்த ஆண்டுகளைப்போல சென்டிமீட்டர் அளவில் மழையில்லை. மிமீ அளவுக்கே மழைப்பொழிவு உள்ளது. கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்தில் பாசனக்குளம் உள்ளது. 120ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நீரின்றி வறண்டு வருகிறது. சேங்கல், முனையனு£ர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தால் இந்த குளத்திற்கு நீர்வரும். குளம் நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளுக்கு நீர்சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் பயனடையும். இந்தகுளம் நிரம்பினால் மட்டுமே அருகில் உள்ள நிலங்களுக்கு பாசனநீர் கிடைக்கும். கடந்த 6மாதத்திற்கு முன்னர் காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.