பூந்தமல்லி, டிச. 12: சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், வடவள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (35) தச்சு தொழிலாளி. கடந்த 2014ம் ஆண்டு மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் ஜெகன்நாதன் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இவரை சிலர் வெட்டி கொலை செய்து, சடலத்தை எரித்ததாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று கருகிய நிலையில் கிடந்த ஜெகன்நாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த முருகன் (44), சத்யராஜ் (30), சதீஷ் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், முருகனின் மனைவியுடன் ஜெகன்நாதனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பலமுறை எச்சரித்தும் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் முருகன், தனது உறவினர்களான சத்யராஜ், சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து ஜெகன்நாதனை சம்பத்தன்று மது அருந்த அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டி கொலை செய்ததும். பின்னர், அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி சடலத்தை தீ வைத்து எரித்து விட்டு தப்பியதும் தெரிய வந்தது.