நாகர்கோவில், டிச.12: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழாவிற்கான கால்கோள் விழா நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் அனந்தகிருஷ்ணசுவாமி கோயில் தைப்பெருந்திருவிழா வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 8ம் தேதி சனிக்கிழமை தைப்பூசம் நட்சத்திரம் அன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மறுநாள் பிப்ரவரி 9ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்தன்று மாலையில் 5.30 மணிக்கு திரு ஆராட்டு நடைபெறுகிறது.