பந்தலூர், டிச. 11 : பந்தலூர் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது. பந்தலூர் தாலுகா பகுதியில் ஏழை, எளிய மக்கள் மற்றும் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரியும் சாதாரண மக்கள் பெரிதும் இம்மருத்துவமனையை நம்பியுள்ளனர். இந்த மருத்துவமனையில் செவிலியர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் குடியிருப்புகள், லேப் டெக்னீசன்கள், எக்ஸ்ரே, உள்நோயாளிகளுக்கு உணவு சமைக்க சமையல் அறை, சமையலர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சாதாரண சிகிச்சை மட்டும் செய்து வருகின்றனர் தற்போது ஐந்து மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஆட்டோ, ஜீப் ஆகியவற்றில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.