கும்மிடிப்பூண்டி, டிச. 10: கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கழிவறை, சுத்தமான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் எதிரே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆத்துப்பக்கம், வழுதலம்பேடு, குருவி அகரம், பள்ளிபாளையம், மங்காவரம், மேலகழனி, அயநெல்லுர், குருவாட்டுச்சேரி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தொண்டு நிறுவனம் சார்பில் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விதமான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனால் அரசுப்பள்ளி நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தம் செய்யாமல் விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது.