வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

திருவள்ளூர், டிச. 9: திருவள்ளூரில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.  இதில் சங்க தலைவராக வி.ஆர்.ராம்குமார் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக டி.விஜயபாபு, செயலாளராக ஜெ.கணேஷ், பொருளாளராக எஸ்.தமிழ்இனியன், இணை செயலாளராக ஏ.சுகுமார், நூலகராக கே.வைரவன், தணிக்கையாளராக ஜி.குமாரவேலு காப்பாளராக ஜி.கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.ஆலோசனை குழு உறுப்பினர்களாக எஸ்.ஏ.அமுதன், வி.லில்லி, எல்.சுபாஷ்சந்திரபோஸ், பி.செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்களாக கே.சிவகுமார், ஜி.வி.முருகன், பி.கவிதா, ஜெ.சுதாகர், கே.விஜயகுமார், எல்.விஜயலட்சுமி, டி.பி.சுந்தரேசன், ஆர்.ராஜேஷ், எஸ்.பாஸ்கரன், எம்.சம்பத்குமார், பி.எத்திராஜன், ஜி.வினோத்குமார், டி.மகேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அதிகாரிகளாக ஜி.கணேசன், எஸ்.ஐ.அமுதன் இருந்தனர்.

Related Stories: