கடவூர்,டிச.5: மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பாடைகட்டும் போராட்டம் நடத்துவது சம்மந்தமாக அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வரும் 9ம் தேதி மைலம்பட்டி அரசு மருத்துவமனை முன்பு பாடை கட்டும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில் மைலம்பட்டி அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனையாக இல்லை. 24 மணி நேரமும் டாக்டர்கள் மருத்துவமனையில் இல்லை. மற்றும் பிண கூறு ஆய்வு அறை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடவூர் தாசில்தார் மைதிலி, முதுநிலை மருத்துவர் சாந்தாதேவி, சிந்தாமணிபட்டி எஸ்ஐதங்கவேல் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்டது. மருத்துவத்துறை சார்பில் கடந்த 1 மாதத்தில் 5 மருத்துவர்களுடன் மருத்துவமனை இயங்குகிறது. மேலும் கடந்த 2016ம் ஆண்டு வட்டத் தலைமை மருத்துவமனையாக மாறியது, அதற்கான போதிய டாக்டர்கள் பற்றாக்குறை இருந்தது.