தா.பழூர், டிச. 3: தா.பழுர் அருகே கார் மோதி முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூரை சேர்ந்தவர் ரங்கராஜன் (93). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்றார். மதனத்தூர் பாலம் நோக்கி மெயின் ரோட்டில் சென்றபோது எதிர்திசையில் வந்த கார், ரங்கராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரங்கராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கும்பகோணம் மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். பின்னர மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.