ஓசூர், டிச.1: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 30 யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராகி, நெல் அறுவடையையொட்டி 100க்கும் மேற்பட்ட யானைகள் வருவது வழக்கம்.