தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம்

காவேரிப்பட்டணம், மே 14: காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் அமைந்துள்ள வாரச்சந்தையில், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாரி தலைமையில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் திறப்பு விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு, இயந்திரத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நகர செயலாளர் ஜேகேஎஸ் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கவுஸ் பாஷா, ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசு, திமுக பிரமுகர் அன்பரசு, நிர்வாகிகள் கோவிந்தராஜ், அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: