வேதாரண்யம், டிச.1: வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்த பணியாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்காமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும், தாணிக்கோட்டகம் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பத்து நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதை கைவிட்டு நாள்தோறும் வழங்க வேண்டும், இப்பகுதியில் கஜா புயலின்போது 350 குடும்பங்களுக்கு சொந்தமான கழிப்பறைகள் சேதமானது. அதனை அரசு உடனடியாக கட்டிக் கொடுக்க வேண்டும். தாணிக்கோட்டகம் சின்னதேவன்காட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வந்த சந்தைக்குளம் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.