மதுரை, நவ. 27: இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் கடந்த 26.11.1949ல் ஏற்றுக் ெகாள்ளப்பட்டது. இந்த நாளை நாடு முழுவதும் வக்கீல்கள் ஆண்டு ேதாறும் சட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எம்பிஎச்ஏஏ-எம்பிஏ சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வெள்ளைச் சாமியின் 3ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சட்டநாள் நிகழ்ச்சி நடந்தது. ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சட்டநாள் உறுதிமொழியை வாசித்தார். அப்போது வக்கீல்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.இதில், சங்க நிர்வாகிகள் துரைப்பாண்டியன், மகேந்திரபதி, ராமமூர்த்தி, வெங்கடேசன், மூத்த வக்கீல் வீராகதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், எம்எம்பிஏ சங்கத்தின் தலைவர் மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி தலைமையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், நிர்வாகிகள் இளங்கோ, சீனிவாச ராகவன், சுபாஷ்பாபு, வெயில்கனி ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.