கரூர் ராயனூர் தில்லை நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், நவ. 27: கரூர் ராயனூர் தில்லை நகர்ப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கரூர் ராயனூர் தில்லை நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை மேடும் பள்ளமுமாக உள்ளதால் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாமலும் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் தில்லைநகர்ப்பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: