கும்கோணம், நவ. 27: மல்லிகை பூவின் சீசன் முடிந்ததால் முல்லை அரும்பு பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுந்தரபெருமாள்கோயில், சுவாமிமலை, அலவந்திபுரம், பட்டீஸ்வரம், கோபிநாதபெருமாள்கோல், தேனாம்படுகை, உடையாளூர், உமையாள்புரம், உத்தாணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை, முல்லை அரும்பு, ரோஜா போன்ற பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்ட பகுதிகளில் மல்லிகை பூக்களி–்ன் சீசன் குறைந்தது. இதையடுத்து திருச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து கும்பகோணம் பூ மார்க்கெட்டிற்கு முல்லை அரும்பு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.