பெரம்பலூர்,நவ.26:பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடைபெறவுள்ள வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி முகாமில் தகுதியானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடைபெறவுள்ள வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி முகாமில் தகுதியானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் வருகிற 29 ம்தேதி வெள்ளிக்கிழமையன்று வேலைவாய்ப்புடன் கூடிய இலவசத் திறன் பயிற்சிக்கான முகாம் நடைபெ ற உள்ளது.