நாகர்கோவில், நவ.26: அமைச்சர் திறந்து வைத்த இதய நோய் பிரிவு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படவில்லை என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குமரி மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இருதய நோயினால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். இங்கு இருதய நோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இருதய ரத்தநாள அடைப்பை நீக்கும் சிகிச்சை பிரிவு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கப்பட்டது.