பூந்தமல்லி, நவ. 22: திருவேற்காடு, பெருமாள் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் வெங்கடரூபேஷ் (20). மேடவாக்கத்தில் உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வெங்கட ரூபேஷ் வந்தார். அப்போது வீட்டில் பெற்றோர் வெளியே சென்று இருந்ததால் வெங்கட ரூபேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு அவரது பெற்றோர் வீட்டில் வந்து பார்த்தபோது வெங்கட ரூபேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கட ரூபேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.