கரூர், நவ. 20: கரூர் திண்டுக்கல் சாலையில் இருந்து ஏமூர், முத்துலாடம்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை பகுதியை அடுத்து இடதுபுறம் ஏமூர், காந்திகிராமம், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை பிரிகிறது. இந்த சாலையோரம் அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. அதிகளவு குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.