கும்பகோணம், நவ. 20: கும்பகோணத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் ஜிகே.மணி பங்கேற்றார். இதைதொடர்ந்து பாமக மாநில தலைவர் ஜிகே.மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு, விவசாயிகளுக்கு தேவையான அளவில் யூரியா வழங்க வேண்டும். நெல்லுக்கு கூடுதலான விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை வழங்கும் மானியத்தை அதிகரிக்க வேண்டும். இப்போது நெல்லுக்கு அறிவித்துள்ள விலை கட்டுப்படியாகாது.