பூந்தமல்லி, நவ.20: சென்னை வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் பிரபாகர் (30), ஆட்டோ மெக்கானிக்கான இவர், கடந்த வாரம் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கியதாகக் கூறி அவரது நண்பர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் தீவிர விசாரணையில் பிரபாகர் மொபட்டில் சென்றபோது விபத்தில் இறக்கவில்லை. ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது கண்டெய்னர் மீது மோதியதால் பிரபாகர் இறந்து போனது தெரியவந்தது.