அவிநாசி, நவ. 20: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, கொள்கைகளை கண்டித்து, சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் நேற்று அவிநாசியில் பிரசாரம் நடந்தது. அவிநாசி ஒன்றிய பகுதிகளில் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.இப்பிரசாரத்தின்போது ‘தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்க சாமிநாதன் பரிந்துரை அமல்படுத்தவும், கிராமப்புற நூறு நாள் வேலைத்திட்டத்தை பாதுகாத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரத்தை அமல்படுத்தவும், தொழிலாளருக்கு சம ஊதியம் சம வேலை வழங்கவும், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிடக் கோரியும், முறைசாரா நல வாரிய பணப் பயன்களை உடனே வழங்க கோரியும், 55 வயதான பெண்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.