பந்தலூர், நவ. 20: நெலாக்கோட்டை ஊராட்சி பாட்டவயல் கரும்பன் மூலா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதியில் குடிநீர்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், நெலாக்கோட்டை ஊராட்சி கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியில் குடிநீர் கிணறு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன் கிணறு தோன்றும் பணி நடைப்பெற்றது.