நீடாமங்கலம்,நவ.19: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட செயல்விளக்கம நடைபெற்றது. இதில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் அமைப்பது குறித்த பயிற்சி நிலைய கால்நடையியல் விஞ்ஞானி சரவணன் தலைமையில் நடந்தது.அப்போது அவர் கூறுகையில் பயிர்கள்,கால்நடைகள், மீன்வளர்ப்பு ,பறவைகள் மற்றும் வனவியல் போன்றவை ஒங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் அங்கங்களாகும்.வெள்ளாடு ,செம்மறியாடு, பசு,எருமை,ஆடு,கோழிபோன்ற கால்நடைகளின் பகுதிகளாகும்.கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்புக்கு தேவையான வைக்கோல் மற்றும் தீவன புல் பயிர் சாகுபடிகளில் இருந்து பெறப்படுகிறது.ஒரு ஏக்கர் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் 2 கறவை மாடு மற்றும் 4 ஆடுகள் போதுமானதாக இருக்கும். இவற்றின் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை மண்புழு உர உற்பத்திக்கு ஆதாரமாக விளங்குகிறது. என்றார்.