திருப்பூர், நவ.19: திருப்பூரில் சிறுமிக்கு கொல்லிமலை மூலிகை எனக்கூறி அமில கலவையை கொடுத்த பொள்ளாச்சி சித்த வைத்தியரை கைது செய்ய முடியாமல் தனிப்படையினர் திணறி வருகின்றனர். திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (47). இவரது மகளுக்கு உடலின் சில பகுதிகளில் மருகு உருவாகியுள்ளது. தனபாலின் நண்பர் கூறிய ஆலோசனையின்படி பொள்ளாச்சியை சேர்ந்த சித்த மருத்துவர் மருகு மகேந்திரனிடம் சிகிச்சைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு அவர் வீட்டிற்கே நேரில் வந்து சிகிச்சை கொடுப்பதாக கூறி கடந்த ஜீன் மாதம் 16ம் தேதியன்று வீட்டிற்கு வந்து தான் கவரில் கொண்டு வந்த மூலிகை போன்ற பொருட்களை கொடுத்துள்ளார். இதனை 15 லிருந்து 20 நாட்களுக்கு உபயோகப்படுத்தினால் மருகு விழும் எனவும் கூறியுள்ளார். அந்த மருந்தை தனபாலன் தனது மகளுக்கு கொடுத்துள்ளார். நாளடைவில் அந்த மருந்தை உபயோகப்படுத்திய இடத்தில் கடுமையான புண்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மூலிகை அல்ல. மூலிகை என்ற பெயரில் திருநீரு, காஸ்டிங் சோடா,