கூடலூர் நவ. 19: கூடலூரை அடுத்துள்ள தர்மகிரி பகுதியில் இருந்து நேற்று காலை பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஜீப் ஒன்று பிரேக் பிடிக்காமல் சாலையில் மோதி கவிழ்ந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர். தர்மகிரி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ்(32) என்பவர் ஓட்டிவந்த ஜீப்பில் கூடலூர் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பயணிகள் சிலர் ஏறி கூடலூருக்கு வந்துள்ளனர். தானி மட்டம் என்ற இடத்தில் மேடான பகுதியில் ஜீப் வந்தபோது பிரேக் பிடிக்காமல் பின்னால் சென்று சாலையோரத்திட்டில் மோதி கவிழ்ந்தது.