மலைப்பாதையில் மண் சரிவு முழுமையாக அகற்ற கோரிக்கை

குன்னூர், நவ.19: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குன்னூர் பகுதியில் மழைகாரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு மற்றும் ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குன்னூர் கோத்தகிரி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. நெடுஞ்சாலை துறையினர் சார்பில் ஜேசிபி மூலம் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அதனால் நேற்று முதல் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் இருபுறமும் வாகனங்கள் இயக்கப்பட்டது. இருந்த போதும் சாலை ஓரங்களில் விழுந்த மரங்கள் மற்றும் மண்ணோடு சேர்ந்து சேறும்  சகதியாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: