பந்தலூர், நவ. 19 : பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி செவியோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மேத்யூஜார்ஜ்(44). இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சேரம்பாடி பஜாருக்கு பைக்கில் வந்தபோது செவியோடு அருகில் மூன்று காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது. பைக்கில் சென்றவரை துரத்தியதில் அவர் பைக்கை கீழே போட்டுவிட்டு யானையிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஓடியதில் கீழே விழுந்து கால் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய சத்தம் கேட்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் யானையை சத்தமிட்டு துரத்தி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.