சேலம், நவ.13: சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சண்முகம்(66). இவரது தம்பி மணி(63). பிரபல தொழிலதிபர்களான இவர்கள் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது நில அபகரிப்பு புகார்கள் தொடர்ந்து வந்தது. சங்ககிரி போலீஸ் ஸ்டேசனில் 2 வழக்கும், மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் 2 வழக்கும், சிபிசிஐடியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சங்ககிரியை சேர்ந்த செல்வஅரசு(46) என்பவர், சங்ககிரி போலீசில் தொழிலதிபர் சண்முகம், மணி ஆகியோர் மீது புகார் செய்திருந்தார். அதில், கடந்த 1997ம் ஆண்டு கொங்கணாபுரம் ரோட்டில் உள்ள 1 ஏக்கர் நிலத்தை வைத்து ₹6.50 லட்சம் கடன் வாங்கினேன். பிறகு அதே பகுதியில் உள்ள 25 சென்ட் நிலத்தை வைத்து ₹3 லட்சம் பெற்றேன். இதற்கான தொகையை வட்டியுடன் செலுத்திவிட்டேன். ஆனால் அவர்கள் நிலத்திற்கான பத்திரத்தை திரும்ப தராமல்,