மஞ்சூர், நவ.12: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பாலகொலா. இப்பகுதியில் வசிக்கும் படுகரின மக்களின் பாரம்பரிய ‘சூஞ்சு’ பண்டிகையை நேற்று கொண்டாடினர். இந்த பண்டிகையையொட்டி மேற்குநாடு சீமைக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பாலகொலாவில் உள்ள பெந்தொரை அணை என்ற இடத்தில் ஒன்று கூடினர். இதை தொடர்ந்து கிராம தலைவர்கள் முன்னிலையில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பழமை வாய்ந்த தங்க குண்டுமணிகள் மற்றும் வெள்ளி முத்திரைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் வேண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த பண்டிகை குறித்த சுவாரசிய தகவல் வருமாறு, சுமார் 300ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வரி வசூலிக்க அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் சிக்கண்ணதுரை.