சோமனூர், நவ. 12: சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் வாகன திருட்டு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை கருமத்தம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். கருமத்தம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் கணியூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் மதுரை, திருமங்கலம் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், வீரணன், வினோத் குமார் என்பதும், அவர்கள் ேசாமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்து. இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூட்டாளிகளான திருப்பூரை சேர்ந்த தங்கவேல் (36), மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42), சண்முகபாண்டி (38) உள்ளிட்ட மேலும் மூன்று பேரை நேற்று கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர்.