விராலிமலை, நவ.12: விராலிமலை அருகே கொடும்பாளூரில் உள்ள இடங்கழிநாயனார் கோயில் 10ம் ஆண்டு குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.சைவ சமயத்தில் சிவனடியார்களாக இருந்து சிவனால் ஆட்கொள்ள பட்டவர்கள் நாயன்மார்கள் என புராணங்களில் அழைக்கப்படுகின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழிநாயனாருக்கு கொடும்பாளூரில் கோயில் உள்ளது. நாயன்மார்கள் அவதரித்த இடங்களில் அவர்களுக்கு விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன் கொடும்பாளூரில் இடங்கழிநாயனாருக்கு கோயில் கட்டி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.அப்போதிலிருந்து முதல் ஆண்டு தோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 10ம் ஆண்டாக குருபூஜைவிழா நாளை (13ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி திருமுறை பாராயணங்கள் செய்து மஹாஅபிஷேகங்கள், மகேஸ்வர பூஜை, தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடத்தி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.