குளித்தலை, நவ. 12: குளித்தலை அருகே உரம் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு உரம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை உர மூட்டைகள் ஏற்றிய லாரி அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.