திருச்செந்தூர், நவ. 8: திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.37.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். திருச்செந்தூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்செந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு முத்தாரம்மன் கோயில் தெருவில் ரூ.12.5 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரூ.12.50 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல், 14வது வார்டு தோப்பூர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரூ.12.50 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆகியவை கட்டுவதற்கு கடந்தாண்டு டிச.31ம்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போது பணிகள் நிறைவடைந்ததையடுத்து இவற்றினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்கான விழா நேற்று மாலை நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து, சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்து குடிநீர் வழங்கினார்.