பள்ளிப்பட்டு, நவ. 8: ஆர்.கே.பேட்டை அடுத்த வீரமங்கலம் ஊராட்சி பந்திக்குப்பம் கூட்டு சாலையில் இருந்து வீரமங்கலம் அருந்ததி காலனி வழியாக தாமினேரி கூட்டு சாலை உள்ளது. இந்த தார்சாலையை வீரமங்கலம், வீரமங்கலம் அருந்ததி காலனி, காலனி, தாமினேரி, காளிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.இச்சாலை வழியாகதான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் சென்று வருகின்றனர். அதேபோல், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தேவையான இடு பொருட்களை இச்சாலை வழியாகத்தான் எடுத்து வருகின்றனர். தற்போது இச்சாலை மழை பெய்ததால் தார்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக காணப்படுகிறது.