திருக்காட்டுப்பள்ளி, நவ. 7: திருக்காட்டுப்பள்ளி அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை மணல்மேட்டு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் நேற்று திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.