ஓமலூர், நவ.7: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், பெண்கள் பிரிவில் பெரியார் பல்கலைக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியும் முதலிடம் பிடித்தனர். ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவில் பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது. ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணி, சென்னை அண்ணா பல்கலைக்கழக அணியை 29-23 என்ற கோல் கணக்கில் வென்றது. இதே பிரிவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி 3ம் இடம், கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி 4ம் இடம் பிடித்தன. மகளிர் பிரிவு போட்டியில், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி சென்னை அண்ணா பல்கலைக்கழக அணியை 23-12 என்ற கோல் கணக்கில் வென்றது. இதே பிரிவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி 3ம் இடம், சென்னை பல்கலைக்கழக அணி 4ம் இடம் பிடித்தன.