புதுக்கோட்டை, நவ.7: புதுக்கோட்டை கவிநாட்டு கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று கவிநாடு கண்மாய். இந்த கண்மாய் நிறைந்தால் சுமார் 500ல் இருந்து 700 ஏக்கர் அளவிலான நிலங்கள் பாசனை வசதிகள் முப்போவம் பெறும். இதனால் விவசாயிகள் ஒரு போவத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த போவத்தில் அதனை ஈடுசெய்து கொள்வார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பெய்யாததால் குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த குளத்து நீரை நம்பி இருந்து விவசாயிகள் விவசாய தொழிலில் ஈடுபடாமல் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.